“கருப்பு “திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள்:-
சூரியா,ஆர்.ஜே.
பாலாஜி,நட்டி நட்ராஜ் த்ரிஷா,ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியன், வேலா
ராமமூர்த்தி
மஞ்சூர்அலிகான், இந்திரன்ஸ்,அனேகா மாயாரவி, சுவாசிகா,
மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஆர்.ஜே.பாலாஜி
இயக்கத்தில்
சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம்.
இயக்குனர் :-
ஆர். ஜே.பாலாஜி டீம்.வொர்க்
மியூசிக்:-
சாய் அபயங்கர்.
ஒளிப்பதிவு:-
ஜி.கே.விஷணு.
தயாரிப்பாளர்கள்:-
ட்ரிம் வாரியார் பிக்சர்ஸ்.
பெரியளவில் எதிர்பார்ப்புடன் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் கருப்பு.
கேரளாவில் இருந்து தனது மகளின் ஆபரேஷனுக்காக
தமிழ்நாடுக்கு ரயிலில் இரவு நேரத்தில் வருகிறார்
இந்திரன்ஸ். வந்த இடத்தில் அவர்களுடைய
அறுபது சவரன் நகைபையை சில திருடர்கள் கொள்ளையடித்து
ஓடி விடுகிறார்கள்
பின்பு அதனை போலீஸ் கண்டுபிடித்து கொடுக்கிறார்கள்.
ஆனால், 60 பவுன் தங்க நகைக்கு பதிலாக 45 பவுன் மட்டுமே திரும்ப
கிடைக்கின்றது ஆனால் நகையை த தருவதில் தாமாக தரபடுகின்றன.
மேலும், இந்த நகையை இப்போது உடனே தரமுடியாது,
இந்த நகை நீதிமன்றத்தின் மூலமாகதான் உங்களுக்கு தரமுடியும் என்ற
பின்பு தான் பெற்றுக்கொள்ள முடியும் என
அங்கிருந்த கான்ஸ்டேபிள்
ஒருவர் கூறுகிறார்.
இவர்களுடைய இந்த நகை வழக்கை ஆர்.ஜே. பாலாஜி எடுத்து நடத்துகிறார்.
ஆனால், சுலபமாக தரமுடிய வேண்டிய ஒரு வழக்கை வேண்டுமென்றே இழுத்தடித்து செல்கிறார்.
பெரியவர் இந்திரன்ஸிடம் இருந்து ஃபீஸை வாங்கி கொண்டு இருக்கிறார்
பாலாஜி. இதனால் இந்த வழக்கு நான்கு மாதங்களுக்கு மேல் இழுத்துக்கொண்டே போகிறது .ஒரு கட்டத்தில்
பாலாஜியால் நமக்கு சரியான நீதி கிடைக்காது என்று தெரிந்துகொள்
கிறார்.
இதன்பின்னர் இந்திரன்ஸை அடித்து இனி இந்த வழக்கை நீ எப்படி
நடத்துகிற என்று நான் பார்க்கிறேன் என சவால் விடுகிறார் பாலாஜி.
இந்த நேரத்தில் நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள கருப்பு சாமியிடம்
இந்திரன்ஸ் தனது வேதனையை கூறி, எனது பிரச்சனையை நீங்கள் தான் தீர்த்துவை என மிளகாய் அரைத்து
கருப்பு சாமிசிலைக்கு பூசுகிறார். பக்தரின் வேண்டுதலை ஏற்று வேட்டை கருப்பாக வந்து கொடுக்கிறார்
சூர்யா. வந்தவுடன் ஆர்.ஜே. பாலாஜிக்கு தண்டனை தருகிறார்.
அப்போது, பாலாஜி சாதுர்யமாக பேசி, ‘என்னை கொல்வது
எப்படி சரியாகும், நீங்கள் வேண்டுமென்றால் எங்களுடைய
நீதிமன்றத்தை மாற்றி காட்டுங்கள்’ என சவால் விடுகிறார்.
சவாலை ஏற்று நீதிமன்றத்தை சீரமைக்க மனிதனாக வருகிறார் கருப்பு சாமி. இந்த சவாலில்
கருப்பு சாமி வெற்றி பெற்றாரா? இல்லை, என்பதை கருப்பு கோட் போட்ட ஆசாமி வெற்றிப்
பெற்றார்களா? நீதி கேட்டு வந்தவர்களுக்கு நீதி கிடைத்ததா?
இல்லையா, தவறு செய்தவர்களுக்கு நீதி விற்கப்பட்டதா? என்பதே படத்தின் மீதி கதைக்களம்
கருப்பாக என்ட்ரி கொடுத்து திரையரங்கை திருவிழா கோலமாக
மாற்றிவிட்டார் கதாநாயகன் சூர்யா. பல நாட்களுக்கு பின் அன்பான ஃபேனுக்கு
கருப்பு செம விருந்தாக அமைந்துள்ளது. எமோஷனல்,
சண்டை, ஸ்டைல், சர்ப்ரைஸ் என கதைக்களத்தில் மிரட்டி விட்டார் நடிகர்
சூர்யா. பல ஆண்டுகளுக்கு பிறகு ஹீரோவாக திரையில் ஜொலித்துள்ளார்.
சூர்யாவுக்கு அடுத்து படத்தின் மற்றொரு ஹீரோ என்றால் அது நடிகர் இந்திரன்ஸ் தான். மனுஷன்
கண்கலங்க வைத்தது நம் மனதிலேயே வலி ஏற்படுகிறது.
குறிப்பாக மகளை சமாதானம் செய்து உறங்க வைக்கும் காட்சி, மகள்
இறந்தபிறகு நீதிமன்றத்தில் அவர் நடிக்கும் காட்சி ஆகியவற்றில் பட்டையை
கிளப்பியுள்ளார்.
மலையாள திரையுலகில் கொண்டாடிய நடிகர் இந்திரன்ஸ் கருப்பு படத்திற்கு பிறகு தமிழில் பேச படப்போகிறார்.
மேலும் த்ரிஷா, அனகா, ஷிவதா, நட்டி நட்ராஜ் உட்பட அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்குநராக சூர்யா
ரசிகர்களுக்கு மட்டுமின்றி சாமானிய சினிமா ரசிகர்களுக்கு
சிறப்பான விருந்தை வழங்கியுள்ளார்.
“நீதிமன்றத்திற்கு வந்தால் தண்டனை கிடைத்துவிடும் என நம்புகிறோம்,
நீதிமன்றத்திற்கு வருவதே தண்டனைதான்” என சொல்லும்
வசனங்கள் யதார்த்தத்தை பேசுகின்றன.
இயக்குநராக மட்டுமின்றி நடிகராக இப்படத்தில் களமிறங்கியுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி. வில்லத்தனம்
புத்தியை பயன்படுத்தி வில்லத்தனம் செய்த
பாலாஜியின் கதாபாத்திரம் ரசிக்கும்படியாக இருந்தது.
இசை மற்றும் ஒளிப்பதிவு. சாய் அப்யங்கர் படத்திற்கு முரட்டு எலிவேஷன் தனது பின்னணி
இசையால் கொடுத்துள்ளார். குறிப்பாக கருப்பு வரும் காட்சிகளில் பின்னணி இசை
திரையரங்கை தெறிக்கவிட்டு விட்டது. அதற்கு துணையாக ஒளிப்பதிவாளர்
இந்திரன்ஸ், ஆர். ஜே. பாலாஜி, த்ரிஷா
படம் பார்த்தத்தில் இந்த கருப்பு அன்பான மட்டுமின்றி, சாமானிய சினிமா
ரசிகர்களுக்கு சமர்ப்பணம்.
அனவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய திரைப்படம்.