ஃப்யர் திரைப்பட விமர்சனம்…

ஃப்யர் திரைப்பட விமர்சனம்…
இயக்கம்: ஜே எஸ் கே
நடிகர்கள்: பாலாஜி முருகதாஸ். சாந்தினி, ரச்சிதா, சாக்ஷி அகர்வால், காயத்ரி சென், மற்றும் பலர் நடித்துள்ளனர்…
ஒளிப்பதிவு: சதீஷ்
இசை: டி கே
தயாரிப்பு: ஜே எஸ் கே
இந்த படத்தை படத்தின் கதைக்களம் பெண்களை
மையப்படுத்தி எடுக்கப்பட்டது என்றால் அவர்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் இந்த
படத்தில் கூறுகின்றனர் எப்பவும் எதையும்
நம்பி போகக்கூடாது ஒன்று அதுவும் ஆண்களை நம்பி
போகவேக் கூடாது என்பதை எடுத்து காட்டியுள்ளார்.
இயக்குனர் .ஜே எஸ் கே எப்பவும் பெண்கள் ஆண்களுடன் பழக போது மிகவும்
கவனமாக எச்சரிக்கையுடன்.
இருக்கவேண்டும்…
என்பதை இந்த படத்தின் மூலம் வலியுறுத்தி உள்ளார். எத்தனை
பெண்கள் இந்த உலகில் தனது வாழ்க்கை யோடு
ஆண்கள் விளையாடி
வாழ்க்கையை அழிந்து
கொண்டு இருக்கிறார்கள்
பிசியோதெரபி மருத்துவராக தனியாக க்ளீனிக் ஒன்றை நடத்தி
வருகிறார். டாக்டர் காசி. தனது மகனைக் காணவில்லை என்று
காசியின் பெற்றோர் காவல்நிலையத்தில்
புகார் கொடுக்கிறார்
கள், இதை விசாரிக்கத் துவங்குகிறார்.
இன்ஸ்பெக்டர்
ஜே எஸ் கே.
இந்த வழக்கு விசாரணையை தீவிரமாக்குகிறார்
ஜே எஸ் கே.
விசாரித்த இடங்களிலெல்லாம், காசி பத்தி நல்லதையே சொல்கின்றனர்.
இந்த சூழலில், காசியை நான் தான் கொன்றேன்.என்று பெரியவர் ஒருவர் போலீஸிடம் சரணடைகிறார்.
பின்னர், காசி உயிரோடு தான் இருக்கிறார். அவர் என்னிடம் செல் போனில் பேசியதாக காசியின் பெற்றோர்.
போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.
காணாமல் போன காசியின் பின்னால் இருக்கும் மர்மம் தான் என்ன.?
அவரின் மற்றொரு முகம் என்ன.? என்பதே படத்தின் மீதிக் கதைக்களம்
என்வென்று சொல்லு
கிறது.
சில வருடங்களுக்குஒ பிறகு நடந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி எடுத்த பெயர் தான்
காசி. என்பவன் நாகர்கோவிலில் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய காசி
என்பவனின் கதையை மையமாக தான் எடுத்திருக்கிறார் இயக்குனரான
ஜே எஸ் கே. படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
நடிகர் பாலாஜி முருகதாஸ். ரொமாண்டிக் காட்சிகளில் கன கச்சிதமாக
நடித்திருக்கும் பாலாஜி, மற்ற காட்சிகளில் கொஞ்சம் மிகைப்படுத்தி நடித்துள்ளார்.
என்று தான் சொல்ல வேண்டும். படத்தின் முக்கியமான
கதாபாத்திரத்தில் நடிப்பதென்றால், அதற்கான
மெனக்கெடலை சற்று எடுத்திருந்த இருக்கிறார் பாலாஜி.
போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில்
ஜே எஸ் கே, மிடுக்கன காட்சிகளில் தோன்றி இருந்தாலும்,
ஒரு சில காட்சி இடங்களில் நடத்தியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
படத்தின் நான்கு தூண்களாக நடித்தவர்கள் தான் கதாநாயகிகளான சாந்தினி தமிழரசன்,
சாக்ஷி அகர்வால், ரச்சிதா மஹாலட்சுமி மற்றும் காயத்ரி ஷான்.
படத்தின் இரண்டாம் பாதியில் இவர்கள் நால்வரின்
கதாபாத்திரமும் கதையை அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் சென்று விட்டது.
ஒரு பெண் எந்த இடத்தில் தவறான ஆண் மகனிடம் ஆசையில் விழுந்து விடுகிறாள். என்பதை
மிகவும் விரிவான இயல்பான நடிப்பைக் கொடுத்து
அசத்தியிருக்கிறார்கள். இந்த நான்கு கதையின் நாயகிகளும்.
சரியான ஒரு கதையை,
சரியான ஒரு
தருணத்தில்,
சரியாக வேண்டிய ஒரு சமூகத்தில்
பேசுவதற்கு கூட ஒரு தைரியம் வேண்டும். அதை தைரியமாக
வெளிச்சம் போட்டு மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்.
இயக்குனர் ஜே எஸ் கே. குரூர எண்ணம் கொண்ட ஆண்களிடம் பெண்கள் என்ன
மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை ஒரு விழிப்புணர்வு படமாக
இப்படத்தை இயக்குனர் ஜே எஸ் கே படைத்திருக்கிறார்.
அனைத்து பெண்களும் பெண்களை பெற்ற எல்லா
பெற்றோர்களும் இப்படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும்.
அனைவரும் தங்களது நடிப்பிலும் இன்னும் சற்று கூடுதல் கவனம்
செலுத்தியிருந்தால்
என்ற எண்ணம் நமக்குள் எழாமல் இல்லை.
பின்னணி இசை மற்றும் பாடல்கள் இரண்டுமே
படத்திற்கு பக்க பலமாக சேர்ந்து நிற்கிறது.
எஸ் கே ஜீவாவின் வசனங்கள் கைதட்ட வைத்துள்ளன.
சதீஷின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக காட்டியிருக்கிறது.
எழுந்து நின்று கைதட்டல் கொடுக்கும் அளவிற்கான ஒரு தரமான க்ளைமாக்ஸ்
காட்சியை வைத்திருந்தது படத்திற்கு மிகப்பெரும் பலம்..
ஃபயர் படம் பார்ப்பவர்களின்
மனதில் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்
என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
ஃபயர் – இந்த படத்தில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் தரமான படைப்பு…