“நரிவேட்டை” திரைப்பட விமர்சனம்…

“நரிவேட்டை” திரைப்பட விமர்சனம்…

மலையாளப்படத்தின் தமிழ் வடிவம்…

நடித்தவர்கள் :- டோவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமூடு , சேரன், ப்ரியம்வதா கிருஷ்ணன், ஆர்யா சலீம், மற்றும் பலர் நடித்துள்ளனர்கள்

டைரக்டர் :-அனுராஜ் மனோகர்.
கதை :- அபின் ஜோசப்.

ஒளிப்பதிவு :-விஜய்

நரிவேட்டை என்பது, நரியைப் போல நரித் தந்திரம் செய்யும் மனிதர்களை , ஒப்பிட்டு, ஒரு

நாடகம். நரி ஆடும் வேட்டையே நரி வேட்டை.யின் கதைக்களம்.

படிப்புக்கு ஏற்பே வேலைக்கு போவேன். என்று சுற்றிதிரிந்துக் கொண்டு நாயகன்

வங்கியில் பணி செய்யும் பால்ய கால காதலியிடம் (ப்ரியம்வதா) பாக்கெட் மணி வாங்கி செலவு செய்யும் டோவினோ தாமஸ்,

காதலியின் அப்பா, சித்தப்பா, ஆகியோர் அவரை அவமானப்படுத்த அவரது அம்மாவும் மனம்

வருந்தி போக நல்ல வேலை கிடைக்கும் வரை காவல்த் துறை வேலையில் சேர்கிறார்.

அங்கே சீனியர்கள் செய்யும் அக்குறுமம் அடாவடி தனத்தில் இருந்து சீனியர் போலீஸ்காரர் ஒருவர் சுராஜ் வெஞ்சரமூடு

பழங்குடி மக்களின் நிலத்தில் இருந்து அவர்களை அப்புறப்படுத்த

விரும்பும் கேரள அரசு, போலீஸ் அதிகாரிகள் மூலம் பல வித தந்திரங்கள் செய்து,அந்த

மக்களுக்கும் மாவோயிஸ்ட்டுகள் உதவுவதாக பொய் சொல்லி,எப்படியும்

அவர்களை தவறாக சித்தரிக்க முயற்சிக்கிறது .

ஆரம்பத்தில் அவனுக்கும் ஆதிவாசிகளை பிடிக்கவில்லை.

ஆனால் தலைமை போலீஸ் அதிகாரியாக வருபவர் சேரன் மக்கள் மீது

கரிசனமாக இருப்பதாக அவன் உணர்கிறார் .

ஒரு சூழ்நிலையில் எல்லாமே மாறுகிறது. பாசமுடன் பழகிய சீனியர் போலீஸ் நண்பர் காட்டுக்குள் கொடூரமாக கொல்லப்படுகிறார்.

ஆதிவாசிகள் மேல் கோபப்படும் அரசும் காவல்த் துறையும் அவர்களது குடிசைகளை

கொளுத்தி ஆட்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றும் பேயாட்டம் ஆடுகிறது .

இன்னொரு பக்கம் அவனுக்குத் தெரிய வரும் உண்மைகள்

வேறாக இருக்க , நடந்தது என்ன என்பதே படத்தின் கதைக்களம்.

ஆதிவாசிகள், அரசு இவர்களுக்கு இடையேயான

கார்ப்பரேட் ஆதரவு மண்ணின் மைந்தர்கள் போராட்டத்தை

நிகழ்வுகளை உண்மைக்கு நெருக்கமாக
யதார்த்தமாக சொல்கிறது. இந்தபடம்.

நாயகனின் ஆரம்பகால விட்டேத்தியான வாழ்வும் அதன்

நிகழ்வுகளும் கேரள மண் மணத்தோடு சொல்லப்படுகின்றன

ஆதிவாசிகளை ஒழிக்க அரசும் காவல்த் துறையும் என்ன எல்லாம் செய்ய முடியும் என்பதில் அதிக

அனுபவம் கேரள அரசுகளுக்கே உண்டு என்பதாலேயோ என்னவோ காட்சிகள் அவ்வளவு இயல்பு .

ஆதிவாசிகளின் தரப்பிலும் படித்தவர்கள் இருப்பதை அழகாக காட்டுகிறார்கள் .

டோவினோ தாமஸ் . ப்ரியம்வதா கிருஷ்ணன், ஆதிவாசிகளின் போராட்டக் குழு தலைவியாக வரும் ஆர்யா சலீம், ஆதிவாசி

இளைஞன், அந்த சிறுமி ஆகியோரின் நடிப்பு

இயல்பானதாக இருக்கு ஒன்றிரண்டு காட்சிகளில் வரும்

அந்த தாய்மாமன் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர் கூட கச்சிதமாக பொருந்தியுள்ளார்.
கள் நல்லவர் போல் நடிக்க துவங்கி அயோக்கியத்தனம்

வஞ்சகம் இவற்றின் மொத்த உருவகமாக மாறும் கேரக்டரில் இயக்குனர் சேரன் .

இந்த கேரக்டரை சேரனை விட சிறப்பாக பொருத்தமாக நடிக்க, மலையாளத்திலேயே நடிகர்கள் உண்டு .

ஆனால் சேரனை ஏன் கூப்பிடணும்?

இருவது வருஷம் முன்னாடி கேரளாவுக்கே வந்து மலையாளப்

பெண்ணுக்கு தமிழ் எழுத்துக்கள் சேலை கட்டிப் படம்

எடுத்தவன் தானே நீய் வாடி வா உனக்குத்தான் காத்திருந்தோம்.

மலையாள ஆதிவாசிகளை ஒழிக்க கேரளா அரசுக்கு உதவும் போலீஸ் யாரும் நம்முட சேட்டன்மார்கள் அல்ல. நோக்காணும் அயாட்கள் எல்லாம் பாண்டிப் பட்டிகள் தானே என்று கேரள மக்களுக்கு சொல்லாமல்

சொல்ல வசதியாக இந்தக் கேரக்டருக்கு பொருத்தமே

இல்லாமல் சேரனை கூப்பிட்டு நடிக்கச சொல்லி இருக்கிறார்கள் .

இவரும் போய் நடித்து விட்டு வந்திருக்கிறார் .

பொருத்தமான உயரம் இல்லாமல் , லூசான யூனிபார்ம் , ஆடி நடக்கும் நடை என்று ஆரம்பக் காட்சிகளில் சரியான போலீஸ் போலவே இருக்கிறார் சேரன் .

பின்னால் வரும் காட்சிகளும் டோவினோ தாமஸ் போன்றவர்களின்

ரியாக்ஷன்களும் சேரனைக் கொஞ்சம் காப்பாற்றுகின்றன .

நல்லதோ கெட்டதோ ஒரு படத்தில் ஒரு சூழலை தொடர்ந்து இரண்டு மணி நேரம் ரசிகனை உணரச் செய்யும் போது, அது

சுமாராக இருந்தது அதற்குள் ரசிகன் ஆழ்ந்து போய்

விடுவான். அப்புறம் என்ன ஒரு முடிவு சொன்னாலும் அந்தப்

படம் நன்றாக இருக்கிற மாதிரியே தெரியும் .

பல மலையாளப் படங்களின் ஒகே லெவல் வெற்றிக்குக் காரணம் இதுதான் .

ஆனால் தமிழில் இது எல்லா நேரமும் பலன் தராது . ஏனெனில்

திரைக்கதையில் மலை உச்சி , அதல பாதாளம் இரண்டையும் நாம் தமிழ் சினிமா

ரசிகர்களுக்கு காட்டி விட்டோம்; காட்டிக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால் அந்த உத்தி மட்டுமின்றி இந்தப் படத்தின் அடிப்படைக்

கதையும் நம் உள்ளங்களைக் கொள்ளை கொள்வதால்,தான் பரி ஏறிப் போகிறது நரி வேட்டை…