பெத்தி”திரைப்பட விமர்சனம்

“பெத்தி”திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் :-
ராம்சரண்,‌ஜான்வி
கபூர்,
சிவராஜ் குமார், ஜெகபதிபாபு, திவ்யேந்துசர்மா,

போமன் ராணி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர்
புச்சி பாபு சனா.

மியூசிக்:-
ஏ.ஆர்.ரஹ்மான்.

ஒளிப்பதிவு:-
ஆர்.ரத்னவேலு.

படத்தொகுப்பு:-
நவின் நூலி.

தயாரிப்பாளர்கள்:-
வெங்கட சதீஷ் கிலாரு.

ஊர்பேர் தெரியாத அந்த கிராமத்துக்கு, ஒரு அடையாளமே

தெரியாத மலைவாழ் மக்கள், அங்கீகாரம் இல்லாத அவர்களது

வாழ்க்கையில் ஒருவிதமான, என்று இந்திய அரசின்

பதிவில் இல்லாத பழங்குடியினர்
மக்கள் தங்களுக்காக அந்த

அடையாளத்திற்காக அவர்கள் போராடுகிறார்கள். ஒன்று

அவர்களில்
ஒருவரான நாயகன் ராம்சரண், தங்களுக்கான அடையாளம் மற்றும்

அங்கீகாரம், விளையாட்டு போட்டியில் சேர்ந்து

சாதித்தால் நிச்சயம் நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பயணிக்கிறார்.

அவரது பயணத்தில் எதிர்ப்புகள், ஏமாற்றம், சதிகள், எதிர்பாராதவிதமாக சோதனைகள் என்று பல தடைகள் வருகின்றன.

அனைத்தையும் ஒரு பொழுது தகர்த்தெறியும் நேரத்தில் வெற்றி நெருங்கும் நேரத்திலும்

அவரால் இனி விளையாட்டு போட்டிகளில்

பங்கேற்கவே முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது.

அப்படி இருந்தும் தனது முயற்சியை கைவிடாத ராம்

சரண், வேறு ஒரு வழியில் சாதனைப்புரிந்து தான் ஆவேன். என்று நினைத்தை

செய்து முடிக்கிற முயற்சியில் ஈடுபடு கிறார்.

அதுல என்ன ?, அதில் அவர்

நினைத்தது போல் வெற்றி பெற்றாரா?, இல்லையா?அவரது ஊருக்கும், மக்களுக்கும்

அடையாளம் அங்கீகாரம் கிடைத்ததா ?‌ இல்லையா?என்பதை ஒரு

விளையாட்டு வீரரின் போராட்ட வாழ்க்கையாக சொல்வது‌ தான் “பெத்தி”.

உண்மையில் நடந்த சம்பவத்தை கொண்ட திரைப்பட கதைக்களம்.

ஒருவருக்கு முக்கியம் விளையாட்டு தான் ஒரு வீரருக்கு உடல்

மற்றும் ஆற்றலுடன் படத்தில் காட்சி முழுவதும் வலம் வருகிறார் நாயகன் ராம் சரண்,

கடுமையாக உழைத்திருக்கிறார் இந்த திரைப்படத்தில் தெரிகின்றன. தனது சமூகத்திற்கு

பெரிய அடையாளத்தை பெற அதை

அடைவதற்கு பலவிதமான தடைகளை தாண்டிய வருகிறார்.

அவரது பயணத்தில் மிக உணர்வு ப்பூர்வமான நடிப்பில் பார்வையாளர்களை
கவனத்தை ஈர்த்ததுள்ளார்.

ராம் சரண், துடிப்பான கற்ற வித்தையின் மூலம் பார்வையாளர்களின் கவனம் முழுவதை

தனது பக்கம் ஈர்த்துக் கொண்டு வலம் வருகிறார்.

நாயகியாக நடித்திருக்கிறார். ஜான்வி கபூர்

வழக்கமான கமர்ஷியல் கதாநாயகியாக வலம் வருகிறார்.

மற்றும், கதைக்கும் அவருக்கும் பெரிய எந்த விதமான தொடர்பு இல்லை.

குஸ்தி வாத்தியாராக நடித்திருக்கிறார் .
சிவராஜ்குமார்.
அவரது பேச்சிலும், செயலும் கம்பீரமாக

இருப்பதால், ஒரு சிறந்த வாத்தியாருக்குரிய அனைத்து பெரிய அசைவுகளையும்

தன் உடல்மொழியில் மூலம் மிக சிறப்பாக வெளிக்காட்டியிருக்கிறார்.

ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா, பொமன் இராணி

ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பில் மூலம்

திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார் கள்.

ஆர்.ரத்னவேலுவின் ஒளிப்பதிவு காட்சிகளை

பிரமாண்டத்தின்
உச்சத்தை தொட வைத்திருக்கிறார்.

முதலில் கிரிக்கெட் , குஸ்தி,கிராஸ் ஒவர் தடகடவீரர், ஓட்டப்பந்தயம், என அனைத்து

விளையாட்டு போட்டிகளில் பிரமாண்டமாக,

விறுவிறுப்பாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும்

ஒவ்வொரு ரகங்களில் கேட்கும் படி முணு

வைக்கின்றன. பின்னணி இசை

காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்
கின்றன.

நவீன் நூலியின் படத்தொகுப்பு, அவினாஷ் கொல்லாவின்

தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவை

படத்திற்கு அதிக கூடுதல் பலம் சேர்த்திருப்பது, படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தி

அதிகரிக்கச் செய்திருக்கின்றன.

பெரிய நாடு என்ற அடையாளத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்ற

இந்த திரைப்படம் நவீன இந்தியாவில், பேரே தெரியாத சில கிராமங்கள்

இருப்பதை அங்கு வாழும் மக்களுக்கு எந்தவிதமான ஒரு

அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை

என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் புச்சி பாபு சனா, ஒரு

விளையாட்டு வீரனால் ஒரு சமூகத்திற்கான

அடையாளத்தை பெற்றுக் கொடுக்க முடியும் என்பதை

உண்மைக்கு நெருக்கமாக நேர்மாறாக சொல்லியிருக்கிறார்

ஒரு விளையாட்டு போட்டியை மட்டும் ஒன்று மையப்படுத்தி திரைக்கதை

அமைத்து எந்த விளையாட்டாக

இருந்தாலும், அதன் மூலம் தனக்கான அடையாளத்தை

பெற முடியும் ஒரு இளைஞனின் போராட்ட

வாழ்க்கையை திரைக்கதையில் இருப்பது படத்தை சுவாரஸ்யமாக

நகர்த்துவது, மற்ற விளையாட்டு படங்களில் இருந்து

வித்தியாசப்படுத்தி காட்டுகின்றன.

படம் பார்த்தத்தில், “பெத்தி” ரயில்வே ஸ்டேஷன் எங்கள் ஊரில் நிற்க வேண்டும் என்று போராட்டம் செய்த

இடம் உண்மையில் நடந்த சம்பவத்தை நினைவு படுத்தும்

வகையில் எடுத்த திரைப்படம் என்று சொல்ல வைக்கும்.‌ இது‌ ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் ‌நிறைந்த

இந்த படத்தை அனைவரும்‌ திரையரங்குகளில் பார்க்க வேண்டிய திரைப்படம்.