“ஜன நாயகன்” திரைப்பட விமர்சனம்…

 

“ஜன நாயகன்” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள்:-
விஜய்,
பூஜா ஹெக்டே,
பாபி தியோல்,

மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன்,
பிரகாஷ் ராஜ்,
பிரியாமணி,

நரேன்,சுனில்,
ரேவதி,ஜி.எம். சுந்தர்ஷரத் ரவி, அர்ஷத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர்:-
எச் வினோத்

மியூசிக்:-
அனிரூத்.

ஒளிப்பதிவு:-
சத்யன் சூரியன்.

படத்தொகுப்பு:-
பிரதீப் இ.ராகவ்.

கலை இயக்குனர்:-
வி.செல்வகுமார்.

தயாரிப்பாளர்கள் :-
வெங்கட் கே. நாராணா

ஸ்டண்ட்
இயக்குனர்:-
அனல் அரசு.

காஸ்டியூம் டிசைன்:-
பல்லவி சிங்.

விளம்பரம்:-
கோபிபிரசன்னா.

நடனம்:-
சேகர் வி.ஜே.சுதன்.

ஸ்டில்ஸ்:-
மோனேக்ஷா.

பி.ஆர்.ஓ:-
ரியாஸ் கே.அஹ்மத்.பாரஸ்ரியாஸ்.

 

தவறு செய்தவனை
தான் கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டு
இருக்கிறார்.

நாயகன் விஜய், தனது தாய் சாகின்ற சூழ்

நிலையில் உள்ள தாய்யை பார்க்க விஜய்க்கு கடைசியாக அனுமதி கொடுத்தது.

சட்டத்தை மீறிய ஜெயிலர் கெளதம் வாசுதேவ் மேனன்
உதவி செய்கிறார்.

இதனால், அவர் மீது பெரிய மரியாதை வைத்திருந்த

விஜய், அவரது மகள் மீதும் அன்பும் பாசமும் காட்டுகிறார். தனது

மகளை‌ ஒப்படைத்து போகின்ற வேலையில்

திடீரென்று பைக்கில் ஒன்றில் சென்ற போது லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டு கெளதம் மேனன் இறந்து விடுகிறார்.

அன்று முதல் அவரது மகளை போன்று தனது மகளாக பாவித்து பாதுகாத்து விஜய் அவரை வளர்த்து வருக்
கிறார்.

இந்த சூழ்நிலையில், விஜயின் வளர்ப்பு மகளாக மமிதா

பைஜூக்கு ஒரு பிரச்சனை
வருகின்றன அந்த

பிரச்சனையில் இருந்து மகளை காப்பாற்றும் விஜய், யாரை கொலை

செய்ததற்காக சிறைக்கு சென்றார் அவரால் தான்

தனது மகளுக்கு மீண்டும் பிரச்சனை வந்தது என்பதை தெரிந்துக் கொள்கிறார்.

விஜயை
எதிர்பார்த்து பாபி தியோலும் பெரும் அதிர்ச்சியடைந்து போகிறார்.

இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே இருந்த பிளாஷ் பேக் என்ன ?, என்பதை இறந்த

பாபி தியோல் மீண்டும் வந்தது எப்படி, அவரது புதிய திட்டம் என்ன ?, அதை

விஜய் எப்படி செய்தார் என்பதை கலர்புல் கமர்ஷியல்

அமைப்புடன்
அரசியல் பிரச்சாரத்துடன் சொல்வது தான்

“ஜன நாயகன்” திரைப்பட கதைக்களம்.

விஜய் எல்லா படத்தில் வழக்கம் போல் தனது ரசிகர்களை

திருப்திப்படுத்தில் விதமாக நடித்திருப்பதால், தனது ரொமான்ஸ், குறும்புத்தனம் ,

மற்றும் காமெடி காட்சிகளை கைவிட்டுவிட்டு, அரசியல்

பிரச்சாரத்தில் தீவிரம் காட்டியிருக்கிறார்.

ஆக்‌ஷன் காட்சிகளிலும், பஞ்ச் வசனம் பேசும் காட்சிகளிலும்

திரையரங்கையே அதிர கேளிக்கையில் தெறிக்க வைக்கிறார்.

பூஜா ஹெக்டே நாயகி என்ற அந்தஸ்த்துடன் வலம் வந்தாலும்,

அவருக்கு டூயட் பாடல் இல்லை, எதுவும் இல்லை காதல் காட்சிகளும் இல்லை. படம்

முழுவதும் ஸ்மைலுடன் வலம் வருவது மட்டும் அவரது வேலை. சில இடங்களில்

திரைக்கதையில் பயணிப்பது போன்ற பிம்பத்தையும்

உருவான பொம்மையாக காட்சிகளில் வலம்‌ வருகிறார்.

வில்லனாக நடித்திருக்கிறார்
பாபி தியோல் தெறிக்க விட்டு மிரட்டுகிறார்.

நேர்மையான அதிகாரியாக இருந்து வில்லனாக உருவெடுத்த அவருக்கான

பிளாஷ் பேக் காட்சிகள் மற்றும் அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு கவனம் ஈர்க்கிறார்.

விஜயின் வளர்ப்பு மகளாக நடித்திருக்கிறார். மமிதா பைஜூ, துள்ளல் நடிப்பு மூலம் கவனம்
ஈர்க்கிறார்.

சித்தா என்று விஜயை செல்லமாக கூப்பிடும்

காட்சிகளிலும், அவரிடம் இருந்து விலக நினைக்கின்ற

காட்சிகளிலும் நடிப்பில் மார்க் செய்திருக்கிறார்.

ஜெயிலராக நடித்திருக்கிறார். கெளதம் வாசுதேவ் மேனன், அரசியல்வாதியாக

நடித்திருக்கிறார். பிரகாஷ் ராஜ், கலெக்டராக நடித்திருக்கிறார்.

பிரியாமணி, விஞ்ஞானியாக நடித்திருக்கிறார். நரேன்,

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். சுனில்,

விஜயின் அம்மாவாக நடித்திருக்கிறார். ரேவதி,

தொழிலதிபராக நடித்திருக்கிறார். ஜி.எம்.சுந்தர் என அனைவரும் சின்ன அளவில் தனது

முகத்தை காட்டியிருந்து தங்களது

வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்
கள்.

ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் காட்சிகளை கலர்புல்லாகவும்,

பிரமாண்டமாகவும் படமாக்கியிருக்
கிறார். சண்டைக்காட்சி

களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருக்
கிறார்

கிராபிக்ஸ் காட்சிகள் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது

அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் துள்ளல் ரகம். தளபதி கச்சேரி பாடல் விஜய்

ரசிகர்களுக்கு பெரிய உற்சாகமுற்று
கின்றன

அமைந்துள்ள மற்ற பாடல்களும் கேட்கும் ரகங்கள். பின்னணி இசை

ஆக்‌ஷன் காட்சிகளின் பலத்தை அதிகரிக்கச் செய்திருக்கின்றன.

படத்தொகுப்பாளர் பிரதீப் இ. ராகவ், முதல் பாதி படத்தை பொழுதுபோக்காக

நகர்ந்து சென்று பார்வையாளர்களை திருப்திப்படுத்து
கின்றது

இரண்டாம் பாதியில் இடம்பெறும் பல்வேறு

கதைகளை நேர்த்தியாக சொல்ல படத்தின் நீளம் குறைவாக

இருந்து இருந்தால் பார்வையாளர்
களை சோர்வை குறலத்திருக்
கலாம்.

தெலுங்குத் தழுவல் இருந்தாலும், முதல் பாதி வரை அப்படத்தை வித்தியாசமான முறையில்

எடுத்திருக்கிறார் இயக்குநர் எச்.வினோத், இரண்டாம்

பாதியில் படத்தை விஜய் மற்றும் அவரது தரப்பினரிடம்

கைதி, அப்பா, வனக்காவலர், போலீஸ் இன்ஸ்பெக்டர், தேசத்தின் பாதுகாவலர் என

விஜய்க்கு பல கதாபாத்திரத்தில் அவதாரங்களை கொடுத்திருக்
கிறார் இயக்குநர் எச்.வினோத்,

முழுக்க விஜயின் தேர்தல் பிரச்சார படமாக எடுத்திருக்
கிறார் இயக்குநர் அதை கூட ஒரு

பிரகாஷ் ராஜ் கடைசியில் காட்சி யில் என்ன ஆனார்

என்பதை சொல்லவும் இல்லை.

படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம்

கொடுக்கப்பட்டிருக்கிறது, பார்வையாகளை கொஞ்ம்‌ ஏங்க வைத்து விடுகிறது.

விஜயின் கடைசிப் படம் என்பதால் சிறுவர்கள், தங்கை, அக்கா,அண்ணன், ‌
தம்பி‌ மார்கள்

தாய்மார்கள் பெரியவர்கள் அனைத்து தரப்பினரும் கவர வேண்டும்

என்பதற்காக இயக்குநர் பல காட்சிகளை எடுத்திருகிறார்.

சில இடங்களில் வரும் அந்த காட்சிகள் திரைக்கதையின் கருவில் பயணிக்க வில்லை படத்தில்

விஜய் கச்சேரி பாடல் வரை, ஒரு முழு நேர பொழுதுபோக்கு படமாக

பிறகு சினிமா ரசிகர்களுக்கான படமாகவும், விஜயின் அரசியலுக்கான படமாகவும்.இருக்
கிறது

படம் பார்த்தத்தில், “ஜன நாயகன்” விஜய் ரசிகர்களின் கடைசி ‌திரைப்படம்.
அனைவரும்

திரையரங்குகளில் கொண்டாடி மகிழ்ந்து
பார்க்கவேண்டிய திரைப்படம்.