“பேட்டில்” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் :-
அர்ஜுன் பிரபாகரன், ஆராத்யா, முனிஷ்காந்த், சரவண சுப்பையா,

சுப்ரமணியம் சிவா, சுருளி, காயத்திரி மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்ஷன் :- நாராயணன்.பி.ஏ

மியூசிக் : –
ஜீவா.

ஒளிப்பதிவு:-
யுவராஜ்.ஆர்.

படத்தொகுப்பு:-
காமேஷ்.கே.

கலை இயக்குனர்:-
இளஞ்செழியன்.

தயாரிப்பாளர்கள்:- எலைட் டாக்கீஸ் – கே.பாஸ்கரன்.

திரைப்படத்தில் பாடகாராக ஒரு வர வேண்டும் என்ற ஒரு‌ குறிக்கோளோடு

இருக்கிறார் கதாநாயகன் அர்ஜுன் பிரபாகரனும்,

தனியார் பள்ளியில் ஆசிரியை,
கதாநாயகி ஆராத்யாவை

காதலிக்கிறார். அர்ஜுன் பிரபாகரனின்

நினைச்ச லட்சியம் நிறைவேறுவதற்காக வாய்ப்பு கிடைக்க,

தேடி அதை சரியாக பயன்படுத்தி பெரிய பாடகராக

வருவதற்கு. அவருக்கு வாய்ப்பு கொடுத்தவர்களுக்கு அவர் மூலம்

வெளிநாட்டில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக

மிகப்பெரிய வாய்ப்பு அவருக்கு கிடைக்கின்றன.

இந்த சூழ் நிலையில், ஆராத்யா பணிபுரியும் அந்த பள்ளியில் நடக்கிற

மோசடியின் மூலம் அந்த மாணவர்களும், ஆசிரியர்களும்

மிகபெரிதும் பாதிக்கப்படுகிறது. அப்போது

திடீரென மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

பள்ளியில் நடக்கிற மோசடியை கச்சேரி பாடல் மூலம்
உலகிற்கு தெரியப்படுத்திருக்

கிறார் இந்த பிரச்சனையில் தீர்வு வர வேண்டுமென்ற

ஆராத்யாவின் விருப்பத்தை அர்ஜுன் பிரபாகரன்

நிறைவேற்ற முடிவு
செய்கிறார்.
ஆனால், அவரது இந்த முயற்சி தங்களது

வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும் என்று நினைக்கிற இசை நிறுவனம் அதற்கு

முட்டுக்கட்டை போடுவதால், அவரை மிரட்ட செய்கின்றன.

மறுபுறம் தனியார் பள்ளி தலைவர் சுப்பிரமணிய சிவா,

ஆராத்யாவை கொலை செய்ய முயற்சி செய்கிறார்.

இவர்களை, இவர்கள் மூலம் வரும் பிரச்சனைகளை

சமாளித்து, தாங்கள் நினைத்ததை போல் காதல் ஜோடிகளுக்கு வெற்றி இதுல

கிடைச்சதா இல்லையா? இவர்கள் என்ன செய்தார்கள். அந்த

வேலை முடித்ததா? இல்லையா?, என்பதே படத்தின் “பேட்டில்” மீதிக்‌ கதைக்களம்.

கதாநாயகனாக நடித்திருக்கிறார். அறிமுக நடிகர் அர்ஜுன் பிரபாகரன்,

கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக இருப்பினும் அவர்

நடிப்பில் கொஞ்சம் தடுமாற்றம். ஏற்படுத்தும் விதத்தில் பாடல் பாடும் வேளையில்,

தனது நடிப்பு மற்றும் உடல் மொழியில் வரை தன்னால்

புத்துணர்ச்சியை வெளிக்காட்ட முடியாமல் தான் தவறு‌ இருப்பதால்,

அவரது நடிப்பில், பாடலும் எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

கதாநாயகி ஆரத்யா, அழகு மற்றும் அளவான நடிப்பில் கவர்கிறார்.

தனது வேலையை குறையில்லாமல் செய்து படத்திற்கு பலத்தை சேர்த்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கிறார். சுப்பிரமணிய சிவா, வழக்கம் போல் தனது

கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக

நடித்திருக்கிறார். சரவண சுப்பையா, அரசியல்வாதியாக நடித்திருக்கும் முனிஷ்காந்த், சுருளி, காயத்ரி

மற்றும் அனைத்து நடிகர்களும் தங்கள் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் யுவராஜ்.ஆர், பொருளாதார கட்டுப்பாட்டினால்

காட்சிகளை மிக எளிமையாக படமாக்கியிருப்ப
தால், நேரடி

லொக்கேஷன்களில் படமாக்கி காட்சிகளின் இயல்பு தன்மையை அதிகரித்திருக்கிறார்

இசைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படம் என்பதை மறந்து

இசையமைத்திருக்கிறார் ஜீவா, பாடல்களை தனித்துவமானதாக கொடுத்திருக்கிறார்.

அனைத்து ராப் பாடல்களும், அதன் சூழல்களும் தான் கதைக்களம்

என்றாலும், இசையில் பார்வையாளர்களை கவரக்கூடிய

அம்சங்கள் மிக குறைவாகவே இருக்கின்றன. குறிப்பாக ராப்

பாடல்களுக்கான இசை பார்வையாளர்களை

எந்தவிதத்திலும் பாதிக்காதது படத்திற்கு பலவீனம்.

படத்தொகுப்பு காமேஷ்.கே மற்றும் கலை இயக்குநர்

இளஞ்செழியன் ஆகியோரது பணி பரவாயில்லை ரகம்.

கல்வி வியாபரமாக்கும், கட்டணத்திற்கு ஏற்ப கல்வியும், மாணவர்களுக்கான

வசதியும் இருந்தது. ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் கல்வி

வியாபாரத்தில் முழுவதும் வியாபாரத்தை மட்டுமே பார்க்கிற சில தனியார்

பள்ளிகளில் மாணவர்கள் எதிர்காலம் எப்படி பாழாகின்றன.

என்பதை அதில் பணியாற்றும் ஆசிரியர்கள் எப்படி கொத்தடிமைகள் போல்

நடத்தப்படுகிறார்கள்என்பதையும் தைரியமாக பேசியிருக்கிறார். இயக்குநர்

நாராயணன்.பி.ஏ, இத்தகை சமூகப் பிரச்சனைகளுக்கு

கலை என்ற அரசியல் ஆயுதம் மூலம் தீர்வு காண

முடியும் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

இயக்குநர் நாராயணன்.பி.ஏ, எடுத்துக்கொண்ட கதைக்களம் மற்றும் கலையாலும்,

கலைஞர்களால் பெரும் புரட்சியை ஏற்படுத்தி சமூகத்தில்

மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை விழிப்புணர்வு பிரசாரம், ஆகியவை பாராட்டும்படி

இருப்பினும், அதை ஒரு சுவாரஸ்யம்

மிக்க திரைப்படமாக கொடுத்திருக்கிறார்.

படம் பார்த்தத்தில், “பேட்டில்” போராட்டம் தான் ஒரு மனிதன் தனது உணர்வு.
உயர்வானது

அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.