பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் முன்னாள் அசோசியேட்டாக பணியாற்றிய இயக்குனர் என்.எஸ்.பொன்குமார், ‘ஆகஸ்ட் 16, 1947’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், அற்புதமான படைப்பை கொடுத்திருக்கிறார் வாழ்த்துக்கள்
இப்படத்தில் கவுதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கடந்த வாரம் தமிழில் வெளியான ‘பத்து தலை’யில் துணை வேடத்தில் காணப்பட்ட கௌதம் கார்த்திக், அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கிறார், அவருடைய நடிப்பு படத்தில் உறுதி எல்லாமே ரசிக்க வைக்கிறது
இந்த முறை அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் இனி பல படங்களில் அவர் பரிமாணங்கள் வேறு வேறு விதமாக இருப்பதை காணலாம்
தலைப்பு குறிப்பிடுவது போல, ‘ஆகஸ்ட் 16, 1947’ என்பது இந்திய சுதந்திரத்திற்கு அடுத்த நாள்
கதை முடிகிறது
, பல ஆண்டுகளாக அடிமையாக இருந்த மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு எப்படி ஆங்கிலேயர்களுடன் போராடுகிறார்கள்.
என்பதைச் சொல்லும் கற்பனை கலந்த ஒரு காவிய படைப்பு என்றே சொல்லலாம்
இன்று நாடு வெள்ளைக்காரர்களிடம் சுதந்திரம் வாங்கி கொள்ளைக்காரரிடம் சிக்கிவிட்டது என்று மேடையில் பேசுவதை கேட்டிருப்போம் ஆனால் அந்த சுதந்திரம் வாங்க எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை கண்முன் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்
ஆனால் படத்தின் கதைக்கும் நிஜ வாழ்க்கை சம்பவங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, ஏனெனில் இது முற்றிலும் இயக்குனர் பொன் குமாரின் கற்பனையான யோசனை. 1947-ம் ஆண்டு கதைக்களமாக எடுக்கப்பட்ட படத்தை தயாரித்து பெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்
தயாரிப்பாளர்கள்,
ஏ ஆர் முருகதாஸ்
சிறந்த படைப்பாளி அற்புதமான படங்களை கொடுத்திருக்கிறார் அதனால் தானோ உணர்வுபூர்வமான கதையை தயாரித்துள்ளார் அவருக்கு நமது பாராட்டுக்கள்
தமிழில் ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து நேரடி இடங்களில் படமாக்கியுள்ளனர்.
அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது அவர்கள் படும் துன்பங்களும் கஷ்டங்களும் நாமும் அனுபவித்தது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது
அதுதான் இந்த படத்துக்கு எடுத்த மாபெரும் வெற்றி என்றே சொல்லலாம் இந்த மக்கள் எப்போது இந்த ராட்சசனிடம் இருந்து விடுதலை அடைவார்கள் என்ற ஏக்கத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்
இந்தப் படத்தில் ரியல் ஹீரோ என்றால் இவர்தான்
கலை இயக்குனர் சந்தானம் 1947 நாட்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படத்தின் கருப்பொருள் மற்றும் பின்னணியை கூர்மையாக வரைந்த கால நாடகத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்
ஒவ்வொரு குடிசையும் மாறுபடுத்தி காட்டி இருக்கிறார் ஒரு குடிசை புதுசாகவும் ஒரு குடிசை பலதாகவும் வேறுபடுத்தி காட்டி இருப்பதில் அவரின் பங்கு மிகச் சிறப்பாக இருக்கிறது நம்மை அந்த காலத்துக்கே கொண்டு சென்றதில் இந்த கல இயக்குனருக்கு மிகப்பெரிய வெற்றி
. ஆடை வடிவமைப்பாளரும் காலத்துக்கு ஏற்றவாறு நடிகர்களுக்கு சரியான ஆடைகளை வழங்குவதற்காக படத்திற்காக ஆழமாக உழைத்துள்ளார்.
அழுக்கான உடைகள் அழுக்கான மனிதர்கள் வெள்ளந்தியான மனிதர்கள் இவர்களுடைய அந்த கால துன்பத்தில் சாயலை கொண்டு வந்திருக்கிறார் வடிவமைப்பாளர்
தேசபக்தி படம் ஏறக்குறைய ஒரு வருடமாக படமாக்கப்பட்டது,
அதற்காக அவர்கள் உழைத்திருக்கிறார்கள் என்று படம் பார்க்கும்போது நமக்கு நன்றாகவே தெரிகிறது
‘ஆகஸ்ட் 16, 1947’ இந்த படத்திற்கும் தற்போதைய காலத்திற்கும் தொடர்பு இருப்பது போல் தெரிகிறது. திரைப்படம் கற்பனையாக இருந்தாலும், தேசபக்தி நாடகம் நமது நரம்புகளை சோதிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது, மேலும் இது திருப்பங்களுடன் பார்வையாளர்களை ஒரு பொழுதுபோக்கு சவாரிக்கு அழைத்துச் செல்கிறது
இடைவேளை பிளாக்கில் நாயகியை வில்லன் கெடுப்பதற்கு முயலும் பொழுது அங்கு வரும் நாயகன் அவன் காலை வெட்டி எறிந்து விட அந்த காட்சி தியேட்டரில் கரகோஷம் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு தொற்றிக் க்கொள்கிறது
நாயகி ரேவதி அழகான தேர்வு கதைக்கேற்ப பொருந்தி போயிருக்கிறார் அவரின் மருண்ட விழிகளும் திரண்ட முகமும் படத்திற்கும் கதைக்கும் ஜமீன் மகளாக வலு சேர்த்து இருக்கிறது
,
கவுதம் கார்த்திக்கைத்தவிர இப்படத்தில் ‘ படத்தில் புகழ், ரேவதி ஷர்மா, ரிச்சர்ட் ஆஷ்டன், ஜேசன் ஷா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கடைசியாக ‘ஜெய் பீம்’ படத்திற்கு இசையமைத்த ஷான் ரோல்டன், ‘ஆகஸ்ட் 16, 1947’ மூலம் மீண்டும் வந்துள்ளார், மேலும் புத்துணர்ச்சியூட்டும் இசையமைப்பாளர் தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைப்பால் ரசிகர்களைக் கவர்ந்து உள்ளார்.
செல்வகுமார் ஒளிப்பதிவு
நம்மை அந்த காலத்துக்கு அழகு செல்கிறது எந்த இடத்திலும் 1947 வருடத்தில் நடக்கும் நிகழ்வைத் தவிர நமக்கு வேறு எந்த காரணமும் ஏற்படாத அளவுக்கு ஒலிப்பதிவாளர் கையாண்டு இருக்கிறார் DI கலர் கரெக்ஷன் இரண்டுமே சரியாக உழைத்திருக்கிறார்கள்
சுதர்சன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
கச்சிதமாக இருக்கிறது
மேலும் இந்த படம் கௌதம் கார்த்திக்கிற்கு பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் உதவி செய்யும்
ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்தின் கதை என்ன வாங்க
பார்க்கலாம்
சுதந்திரம் வாங்காத அந்த கிராமத்தில் 60 கிலோ மீட்டர் நடந்து வந்து பொருட்களை வாங்கி செல்லும் ஒரு தனி தீவாக இருக்கும் அந்த கிராமத்தில் பருத்திமட்டும் நன்றாக விளைகிறது
இது வெள்ளையர்களுக்கு இந்த கிராமம் இந்த கிராமத்தில் உழைக்கும் மக்கள் நமக்கு அடிமைகளாகவே இருக்க வேண்டும் இன்று வஞ்சகமும் சூதும் கொண்டு மக்களை வாட்டி வருகிறார்கள் அந்த மக்களுக்கு எப்போது விடுதலை கிடைக்கும் நாடு சுதந்திரம் அடைந்தவுடன் விடுதலை கிடைக்கும் ஆனால் அது அந்த மக்களுக்கு தெரியாது அது எப்படி அந்த மக்களுக்கு தெரியப்போகிறது அவர்கள் அந்த துயரத்தில் இருந்து எப்படி விடுபட போகிறார் கள் நாயகனின் பங்கு என்ன நாயகன் வில்லனை எப்படி வீழ்த்தினார் மக்களுக்கு எப்படி சுதந்திரம் வாங்கி தந்தார் அடிமைப்பட்டு கிடந்த மக்கள் சுதந்திர காற்றை சுவாசித்தார்களா என்பதை உணர்வு பூர்வமாக சொல்லும் படம் தான் 1947 ஆகஸ்ட் 16
கௌதம் கார்த்திக் தனது கதாபாத்திரத்திற்கு சரியான அளவு நுணுக்கங்களைக் தந்துள்ளார்
. தனது கடந்த கால சம்பவங்களைசுமந்து செல்லும் காதலனாக தன் பங்கிற்கு உண்மையாக இருக்க அவனின் தீவிர முயற்சி இது. ரேவதி ஷர்மாவின் தீபாலியின் சித்தரிப்பு சமநிலையானது. மகிழ்ச்சியான அல்லது உணர்ச்சிகரமான காட்சிகளில் அவர் எல்லை மீறிச் செல்லவில்லை.
ரிச்சர்ட் ஆஷ்டன் ஒரு காட்டுமிராண்டி சர்வாதிகாரியாக சிறந்தவர். அவர் ஒரு அற்புதமான திரை இருப்பைக் கட்டளையிடுகிறார் மற்றும் பார்வையாளர்களை பிரிட்டிஷ் ஜெனரலாக அவரது தைரியத்தை வெறுக்கிறார். ஜேசன் ஷா ரிச்சர்டை ஒரு தாக்கமான நடிப்புடன் நிறைவு செய்கிறார்.
என்.எஸ்.பொன்குமார் இயக்குநராக தனது முதல் வெளியீடிலேயே தனது திறனை நிரூபித்துள்ளார். முதல் பாதியில் கதைக்களத்தை அவர் விரித்த விதம் பாராட்டுக்குரியது. இருப்பினும், பிந்தைய பாதி சிறிது நேரம் தடம் மாறுகிறது.தவிர, பொன்குமார் காலனித்துவ காலத்தை சித்தரிப்பதிலும், கதாபாத்திரங்களை உண்மையாகவும் நம்பும்படியாகவும் சிறப்பாகச் செய்கிறார்.
இந்த படத்தின் ஆர்ட் டைரக்டர் சந்தானம் ரியல் ஹீரோ
சரியான கிளைமாக்ஸ் பரபரப்பான கிளைமாக்ஸ் என்ன நடக்கப்போகிறது ரிச்சர்ட் இடம் இருந்து கௌதம் கார்த்தியும் ரேவதியும் தப்பிப்பார்களா ஊர் மக்கள் என்ன ஆக போகிறார்கள் என்பதை சொல்லும் இந்த 1947 சுதந்திர உணர்வை ஊட்டும் படம் தேச பக்தி மறைந்து போன இன்றைய காலகட்டத்திற்கு தேவையான படம் கௌதம் கார்த்திக் தாயை இழந்து வாடும் போது ஊர் மக்களின் முயற்சிக்கும் பேச்சுக்கும் ஆளாகும்போது காதலியிடம் உருகும் போதும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்
இயக்குனர் பொன் குமார் சரியான நேரத்தில் சரியான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் அவருக்கும் நமது வாழ்த்துக்கள்