20க்கும் மேற்பட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார்
*2026-ல் மாஸான அறிவிப்பு ஒன்று வெளியாகும்:
என்னிடம் பாசிட்டிவாக பேசுபவர்களை கண்டால் மட்டுமே பிடிக்கும்
பொன்னியின் செல்வன் பிரமோஷனில் கலந்து கொள்ளாதது ஏன்?
புத்தகம் வாங்க முடியாத மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் எனக்கு போன் செய்தால் புத்தகம் வாங்கி தருவேன்
தற்போது 24 படங்களில் நடித்து வருகிறேன் இந்த ஆண்டு மெகா ஹிட் படம் கொடுப்பேன்
சூரியன் 2 படம் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது ஆனால் சங்கர் இயக்குவாரா என்பது தெரியாது
என்று பல சுவாரசியமான கேள்விகளுக்கு ஜாலியாகவும் தோழமையாகவும் பாசத்தோடும் நேசத்தோடும் பதில் அளித்தார் சுப்ரீம் ஸ்டார்
சூப்பர் ஸ்டார் பிரச்சனையை ரஜினியிடம் பேசி விட்டேன் அவரே நோ ப்ராப்ளம் என்று சொல்லிவிட்டார் எனவே அதை சர்ச்சை ஆக்காதீர்கள் என்று அந்த கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், மீண்டும் திரையுலகில் பொன்னியின் செல்வன் பெரிய பழுவேட்டரையர், ருத்ரன் எதிர்நாயகன் பூமி என கலக்க ஆரம்பித்திருக்கிறார்.
இந்திய சினிமாவின் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டுகளை குவித்துள்ளது.
அவர் வரும் காட்சிகளில் கம்பீரமும் ஆதித்ய கரிகாலனை
காப்பாற்ற முடியவில்லை என்று அரசர் முன்னால் நிலைகுலைவதும் அற்புதமான நடிப்பை வழங்கியிருந்தார்
மேலும் தற்போது 20க்கும் மேற்பட்ட படங்களில், நாயகன், எதிர்நாயகன், வெப் சீரிஸ் என படு பிஸியாக நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன், ருத்ரன் திரைப்படங்களின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் தான் நடிக்கும் மற்ற படங்கள் குறித்தும் இன்று பத்திரிகை ஊடக நண்பர்களோடு பகிர்ந்து கொண்டார் நடிகர் சரத்குமார்.
இந்நிகழ்வினில்
நடிகர் சரத்குமார் பகிர்ந்து கொண்டதாவது…
நான் இப்போது பேசுவது பெரிய பழுவேட்டரையர் பேசுவது போல் உள்ளது என்கிறார்கள், மகிழ்ச்சி. நான் எப்போதும் நல்ல தமிழ் தான் பேசி வருகிறேன். கலை உலகத்தில் இருந்து கொஞ்ச காலம் ஒதுங்கி இருந்தேன், ஆனால் இப்போது தொடர்ந்து படங்கள் நடிக்க ஆரம்பித்துள்ளேன். கலை தான் என் தொழில்.
பத்திரிகை நண்பர்கள் எப்போதும் என்னிடம் உரிமையுடன் எதையும் பரிமாறி வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. இப்போதைய தலைமுறைக்கும் நம்மை தெரிய வேண்டுமென நினைக்கிறேன். பொன்னியின் செல்வன் பட புரமோசனில் நான் கலந்துகொள்ளவில்லை என பலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். என்னை அழைத்திருந்தார்கள் ஆனால் நான் சென்னையில் இல்லாததனால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. மணிரத்னம் மிகச்சிறந்த பாத்திரம் தந்திருந்தார், இப்போது படம் எல்லோரிடத்திலும் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி. பொன்னியின் செல்வன் வாய்ப்பு தந்ததற்கு மணிரத்னத்திற்கு லைகா புரடக்சன் சுபாஸ்கரன் இருவருக்கும் நன்றி. இன்றைய தலைமுறைக்கு என்னை எடுத்து சென்ற வாரிசு படத்திற்காக வம்சி மற்றும் விஜய்க்கு நன்றி. ருத்ரன் வில்லன் பாத்திரம் என்றபோது தயங்கினேன் ஆனால் இப்போதைய ரசிகர்கள் வில்லனாக நடிப்பவர்களை அதே போன்று பார்ப்பதில்லை, அந்த கதாப்பாத்திரத்தை எப்படி செய்துள்ளனர் என்றே பார்க்கிறார்கள். அதனால் தைரியமாக நடித்தேன். அடி வாங்கும் சாதாரண வில்லனாக நடிக்க மாட்டேன். நான் நாயகனாக நடித்த காலத்தை விட இப்போது அதிகப்படம் நடித்து வருகிறேன். வெப் சீரிஸ், படம் என பம்பரமாக சுழன்று வருகிறேன். தொடர்ந்து சினிமாவில் என் பயணம் தொடரும். அரசியல் பற்றி நிறைய கேள்விகள் வருகிறது, விரைவில் அதற்காக தனியாக பத்திரிக்கை நண்பர்களைச் சந்திப்பேன். 2026-ல் ஒரு மாஸான அறிவிப்பு வரும். எப்போதும் உங்கள் ஆதரவு எனக்கு இருந்துள்ளது. அந்த ஆதரவை தொடர்ந்து தாருங்கள் நன்றி.
தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு சரத்குமார் பதிலளித்தார்.
நீங்கள் படம் இயக்குவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்தார் நடிப்பில் சிறந்தவர் என் மனைவி ராதிகா என்று பெருமைப்பட்டார் தன் மகன் ராகுல் நடிக்க வர மாட்டார் என்றும் கூறினார் வரலட்சுமி நடிப்பு இன்று பலராலும் பாராட்டப்படுகிறது அதற்கு நான் எந்த பங்களிப்பும் செய்யவில்லை அவரே மும்பை சென்று நடிப்பு பட்டறையில் நடிப்பு கற்று வந்துள்ளார் என்று எதார்த்தமாக கூறினார் பத்திரிகையாளர் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி நீங்கள் 30 வருடம் இருக்கிறீர்கள் நல்ல கேள்வியாக கேளுங்கள் என்று ஜாலியாக கூறினார்
மலையாளத்திலிருந்து நல்ல கதை வந்திருக்கிறது ஆக்சன் திரில்லர் படம் என்றார்
வாரிசு படம் பார்த்துவிட்டு
இயக்குனர் பாரதிராஜா பாராட்டியது மறக்க முடியாது என்றார்
பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு இன்று மக்கள் ராஜேந்திர சோழனையும் கங்கைகொண்ட சோழனையும் தேட ஆரம்பித்து இருக்கிறார்கள்
அதுவே படத்திற்கு கிடைத்த வெற்றி என்றார்.
மேலும் சமீப காலங்களில் முன்னணி நடிகர்கள் யாரும் இந்த அளவுக்கு பத்திரிகையாளர்களோடு மனம் விட்டு பாசத்தோடு பதில் அளிக்கவில்லை சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்கள்
சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த மனிதநேயம் கொண்டவர் தன்னம்பிக்கை கொண்டவர் தைரியமான மனிதர் எல்லா விபரங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார் என்பதை இந்த பத்திரிகையாளர் சந்திப்பு அடையாளப்படுத்தியது
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்கள் இன்னும் பல சாதனைகள் புரிந்து வெற்றி படிக்கட்டுகளில் பவனி வர கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது